Friday, January 24, 2014

மா விளக்கு செய்யும் முறை

பச்சரியை நன்கு களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு மாவாக அரைக்கவும்.

அரைத்த மாவில், வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாகிவிடும்.

அதனை பந்து போல உருட்டி அகல் விளக்கு போல செய்ய வேண்டும்.

குழியில் நெய்யை ஊற்றி, நெய்யில் நனைத்த பஞ்சு திரியை வைத்து சுவாமி முன்பு ஏற்றி வழிபடலாம்.

வாணிஸ்ரீ சிவகுமார்