Monday, December 23, 2013

பிசிபேளாபாத்

(ஒரு பழைய தினமணியிலிருந்து)

தேவையான பொருட்கள்: பச்சரிசி - 2

டம்ளர், துவரம் பருப்பு - 11/2 டம்ளர், முருங்கைக்காய் - 1 , கத்தரிக்காய் - 4 , புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு , மல்லி இலை - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, தக்காளி - 3 , பெரிய வெங்காயம் - 3 , சாம்பார்பொடி - 2 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைக்க: முழு தனியா - 2 டீஸ்பூன், வரமிளகாய் - 6, சீரகம் - 1 டீ ஸ்பூன், மிளகு - 1 டீ ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 கைப்பிடி, தேங்காய்த்துருவல் - 3 டேபிள்

ஸ்பூன்

தாளிக்க: கடுகு -1டேபிள் ஸ்பூன், வரமிளகாய்-3, கறிவேப்பிலை- சிறிதளவு, வெந்தயம் 1/2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், சாம்பார் வெங்காயம் - 10, நெய் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

* குக்கரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, அரிசி, பருப்பு, மஞ்சள்பொடி ஆகியவற்றைச் சேர்த்து குழைவாக வேக

வைக்கவும்.

* வறுத்து அரைக்க வேண்டியவற்றைச் சிறிது எண்ணெயில் வறுத்து நீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

* நறுக்கிய காய்கறிகள், மஞ்சள் பொடி, பெருங்காயம், சாம்பார் பொடி, உப்பு மற்றும் புளி நீரையும் சேர்த்து வேக வைக்கவும்.

* சாம்பார் வெங்காயத்தை நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.

* வறுத்து அரைத்த மசாலா, வேகவைத்த காய்கறிகள், நெய்யில் வதக்கிய சாம்பார் வெங்காயம் இவை அனைத்தையும் குழைவாக வேக வைத்த சாதத்தில் கலக்கவும்.

* தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துப் போட்டு, இந்தக் கலவையை நன்கு கிளறி மறுபடியும் லேசாக சூடாக்கி இறக்கவும்.

இப்போது கம,கம, பிசிபேளாபாத் ரெடி.

* இதற்கு அப்பளம்,சிப்ஸ் போன்றவற்றுடன் சேர்த்துப் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment