Monday, December 16, 2013

இ‌ட்‌லி பூ போல இரு‌ப்பத‌ற்கு

இ‌ட்‌லி பூ போல இரு‌ப்பத‌ற்கு 3 முக்கியமான வழிமுறைகள் உண்டு:

அரிசி அரைக்கும் பொழுது தண்ணீர் மிகவும் குறைவாக விட்டு, கொர கொர வென அரைத்தல் முக்கியம்.

உளுந்து அரைக்கும் பொழுது, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து தெளித்து அரைத்தல் முக்கியம். ஒரே தடவை வேண்டிய தண்ணீர் விட்டால் போதுமென நினைக்காதீர்கள். ...

அரைத்த உடனேயே மாவை உப்பு போட்டு கையால் கரைத்து வைத்தல் மிக முக்கியம்.

இட்லி மாவை வெளியே வைத்தால் கட்டாயம் பொங்கி வரும், சூட்டிலேயே பொங்கிவிடும். அ‌வ்வாறு செ‌ய்யாம‌ல், அறைத்த உடனேயே கு‌ளி‌ர் பத‌ன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வைத்துவிடுவதால் புளித்துப் பொங்குவதற்கு ஏற்ற சீதோஷ்ணம் இருப்பதில்லை. ‌பிறகு அதனை எடு‌த்து வெ‌ளியே வை‌த்தாலு‌ம் ச‌ரியாக பொ‌ங்காது.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஓவனில் ஒரு நாள் வைத்தால் பொங்கிவிடும். ஓவனை ஆன் செய்யத் தேவையில்லை

No comments:

Post a Comment